Monday, November 28, 2011

பிரிவு

கட்டிக்கொள்ளும் கருத்தோட 
காத்திருக்கும் வேலையில 
கண்மறந்து  காலெடுத்த வேகம்மென்ன ?

வீங்கி போன புண் மனசு 
வெந்துபோகும் கொடுமைஎல்லாம் 
கண்ணால பார்த்த பின்னும் 
பறக்கும் ரெக்கை கொண்டதென்ன ?

புழு நெருப்பில் துடிக்குதுன்னு  
காதெல்லாம் கேட்டிருந்தும் 
நீரில்லா நதிகாட்டி 
காத்தோட போனதென்ன ?

வார்த்தைக்கு அடிமை என்றாய் 
என் கோட்டில் வாழ்வென்றாய் 
ஒரு சலனம் தோன்றியதும் 
பொய்யான தோற்றமென்ன ?

கணமான இதயத்தை 
தாங்குவதுன் கைகள்  தான்
ரண மான இப்போது 
திரும்பாத கரமென்ன?

விட்டில் தான் வெளிச்சத்தில்,
விட்டு விடும் தன்உயிரை !
ஆசை தீ எனை இழுக்க 
அழிவனென்று தெரிந்திருந்தும் 
அடைகாத்து ஆற்றாமல் 
அலை கடலைகடந்ததென்ன ?

விளக்கேத்த போறேன்னுன 
விளங்காம போயிநானும் 
விலங்காக ஆனா பின்னும் 
விரட்டாம நெருப்பெடுத்து
நீ பிடிச்ச ஓட்டமென்ன  ?

ஓடிப்போன கழுதைஎல்லாம் 
ஒரு நாளில் புத்தி பெற்று 
ஊரை நோக்கி ஊர்ந்து வந்தா 
ஆசையெனும் ஆழியிலே 
அத்தனையும்  அழிஞ்சிருக்கும் !
மீதமென்ன அங்கிருக்கும்? -
 ஆனாலும்!!!!!!!!!!!!!!!
குட்டிச் சுவரொன்னுவரவேற்கும்  
பின்ன கழுத கேட்ட குட்டிச் சுவர் தான !!!!!

0 comments:

Post a Comment